Saturday, December 26, 2009

ORUVANUKKU ORUTTHI PEYARALAVIL... OORELLAM VIBACHARAM MANADHALAVIL...

ஓக்____...!!! தகாத வார்த்தைகளை தகனம் செய்ய மனம் தவிக்கிறது ஆனால் இயலவில்லை உங்களால்....
கேளுங்கள் கேவலமனவர்களே!!!
உலகத்தில் மிக உயர்ந்த கலாச்சாரம் எங்கள் கலாச்சாரம்...எங்கள் கலாச்சாரம் என்று உலகை ஏமாற்றி கொண்டு முழு விபச்சாரம் செய்து கொண்டிருக்கும் உங்களை பார்த்துதான்  கேட்கிறேன்...
ஒரு
 நாளைக்கு எத்தனைப் பேரை எத்தனை தடவை கற்பழிப்பீர்கள்??!!!......  உதாரணமாக நீங்கள் (ஆண்/பெண்) அலுவலகம் சென்று பின் மாலையில் வீடு   திரும்பி வருவதற்குள் எத்தனை பேரை அவர்களின் அனுமதிஇன்றி
மனதில் கற்பழிக்கிறீர்கள் /கற்பழிக்கபடுகிறீர்கள்...
மன்னிக்கவும்...
வன்புனருகிறீர்கள்/வன்புனரபடுகிறீர்கள்..
ஏனென்றால் கற்பழிப்பு என்பது சரியான வார்த்தை இல்லை...கற்பு என்பது மனம்  சார்ந்த ஒன்று ... உடல் சார்ந்தது அல்ல.....  மேலும் கற்பு  என்பது ஆண்/பெண் இருவருக்கும் பொதுவானது.

பெண்  அவள் போராடுகிறாள் உடல் பளுவுக்குமட்டும்... முடியவில்லை... அவனோ
அவளின் போராட்டத்தை உடல் பளு கொண்டு அடக்கி விட்டான்/ புணர்ந்தும்  விட்டான்... அவனின்/அந்தவெறி நாயின் விஷமும்  ஏறி விட்டது.....ஆனால்  மனதால் அவனை...அந்த வெறி நாயை புறக்கணித்து/தவிர்த்துவிட்டாள் அவள் ... அவள் இப்போதும் கற்பு உள்ளவள்தான்!!.... அதில் சந்தேகமே இல்லை ... விஷம்... அதை போக்கிவிடலாம்... பிரச்சனை இல்லை.

சரி............அதோடு நிற்கிறதா உங்கள் காமவேட்கை...அலுவலகம் முடிந்து வீடும் திரும்பியாயிற்று நாடகம், சினிமா என்று அதில் வரும் நடிகைகள்/நடிகர்கள் என பெண்கள் ஆண்களையும்..... ஆண்கள் பெண்களையும்...இப்படியே
 24 மணி நேரமும் அட இரவு தூக்க கனவிலும்கூட ...ஐயையோ...!!!

"நானோ உங்களுக்கு சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்குபவன் எவனும் , ஏற்கனவே தன்னுள்ளத்தில் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று"
                                                                                                                           - மத்தேயு 5 : 28
என்று  இயேசு (Peace be upon him) உங்களை 'விபச்சாரர்கள்'  என்கிறார்.

காரணம் கட்டுக்கடங்கா காமம்!!! தவிர்க்க முடியா, தடுக்க முடியா, மறுக்க முடியா, மறைக்க முடியா சக்தி அது! அடக்க முடியா ஆசை அது! உலகத்தை உருவாக்கிய மற்றும் அதன் அழிவை உருவாக்க போகிற ஆற்றல் அது!...........ஆம் அது ஒரு ஆற்றல்!!!

ஆற்றலை ஆக்கவும், அழிக்கவும் முடியாது.. அறிவியல் உண்மை...ஆனால்
ஆற்றலால் ஆக்கவும், அழிக்கவும் முடியும்!!!  இது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் உண்மை......


வான்புகழ் வள்ளுவர்(Peace be upon him) வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்  இக்குறள்களில்...
" காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு  
  நல்லாண்மை என்னும் புணை."                              - குறள் 1144
அதாவது... காமப் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.- என்கிறார்.. மேலும்

" மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்புஇன்றித்
  தும்மல்போல் தோன்றி விடும்"       -                   --குறள் 1263                     
அதாவது....எவ்வளவுத்தான்  அடக்க முயன்றாலும் கட்டுபடாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிபடுகிறதல்லவா!  அதைப் போன்றுத்தான்  காம உணர்ச்சியும் என்னத்தான் மறைத்தாலும் காட்டி கொடுத்துவிடும்.

உங்களின் காமச் சக்தி, ஏற்கனவே பதிவான ஒன்று!  நீங்கள் உங்கள் தாய் வயிற்றில் உருவாகும் போதே உங்களின் தாய் தந்தையின் பரம்பரைகளின் காமச்சக்தி.... அதனால் நிகழும் செயல்கள்..... அதன் பதிவுகள் ஓர் அணுவாய் மாறி வளர்ந்து நீங்களாக  மாறுகிறீர்கள்...அச்சக்தியின் வடிவம் தான் நீங்கள்....
நீங்கள் மற்றும்  உங்கள் குழந்தைகளின் துறுதுறு செயல்களுக்கு அக்காமச் சக்தியே காரணம்.......
நீங்கள் உங்கள் மூதாதையர்களின்   நிகழ்க்  காலம்.... உங்கள் வாரிசுகளோ...உங்களின் நிகழ்காலம் மற்றும் எதிர்க்காலம்!!!.....
அன்பிற்கு அடிப்படை காமமே!!!
அன்பு..... அதிலும் தூய அன்பு என்று உலகில் எதை குறிப்பிடுவீர்கள்!!??
தூயஅன்பு அது தாயன்பு!!! ..
அன்பு...எப்படிபட்டது  என்றால்                                   அவ்வன்பிற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை .... ஏன் பின்னாளில் அப்பிள்ளை அத்தாயை
எட்டி உதைத்தால் கூட அத்தாய் அப்பிள்ளையை அன்பு செய்து கொண்டுத்தான் இருப்பாள்  ....அந்த அளவிற்கு தூய அன்பாக கருதப்படுவது தாயன்பு!.....  அப்படிப்பட்ட  தாயன்பிற்கே காமம் தான் அடிப்படை காரணம் என்றால் அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.
இதை நிருப்பிக்க..... இளைய தலைமுறைகளிடம் ஒரு கேள்வி...
பெண்களே... நீங்கள் ஊசி  மூலம் கருவேற்றப்படுவீர்கள்,..... நீங்கள் பத்து மாதம் சுமந்து சிரமப்பட்டு குழந்தையை பெற்றெடுக்கவேண்டும் மற்றும் வளர்க்கவேண்டும் ... ஆனால் உங்களுக்கு தாம்பத்ய சுகமே  கொடுக்கபடமாட்டாது...என்றால்..... ஏற்றுக்கொள்வீர்களா?
குழந்தை மேல் அந்த தூய அன்பு உங்களுக்கு வருமா?!!
அதேபோல் ஆண்களே..... நீங்கள் உங்கள்  குழந்தையை சிறப்பாக வளர்க்க உங்களால் முடியும் மட்டும் உழைத்து கொடுக்க வேண்டும் ஆனால் தாம்பத்யம் என்கின்ற இன்பமே உங்களுக்கு கொடுக்கபடமாட்டாது என்றால் . ....என்ன?..... சரி என்பீர்களா?

இளம் வயதில் உங்களின் எண்ணம் முழுதும் காமத்தில் மட்டும்  தான் நிலைத்திருக்கும் ....... ஆண் பெண் உடல் உண்மைகள், உடலுறவு இன்பங்கள்...இதைப்பற்றியேத்தான்
மனஆராய்ச்சிகள்.....
அந்த ஆராய்ச்சிகளின்
செயல்முறைக்காகத்தான்
திருமணம்...தாம்பத்யதிலே முழ்கி திளைத்து கொண்டிருக்கும் போதுதான் அந்நிகழ்ச்சி!! பெண் கருவுற்றிருப்பது!!!! அப்போதுதான் பெண்ணிற்கு ஏற்படும்.... புது உறவுக்கான புது உணர்வு!!!......அதற்கு  பிறகுத்தான் குழந்தையைப்பற்றிய சிந்தனை ஆண் பெண் இருவருக்கும் வருகிறது......பத்து மாதமும் அதன் பிறகும் ஏற்படும் சிரமங்கள்....பெண்ணிற்கு அதுவே அன்பாக /தூய அன்பாக மாறுகின்றன...இப்போது மெல்ல புரிந்திருக்குமே?!.... தாயன்பிற்கு அடிப்படை காமம் என்று!!!.....
தாயன்பிற்கே காமம் அடிப்படை என்றால்..... காதலுக்கு?!!!......

எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆசை
மற்றும் காமம் இவைகளின்
குழந்தையான சுயநலம், இந்த 'ஒருவனுக்கு ஒருத்தி' என்கிற கலாச்சாரம் மூலம் நன்கு வளர்கிறது கூடவே  பொறமை மற்றும் பல கெட்ட சகோதர சகோதிரிகளும்
வளர்கின்றன.

ஆண், பெண் இவர்களுக்குள்ள காமப்பசியை இவர்களுக்குல்லையேதான்  பகிர்ந்து கொள்ள வேண்டும் காலம் முழுதும்!!!
இவர்களின்  காமவிளையாட்டிற்கு இவர்களே எல்லை....
இருவரும் இருவர்களுக்கான காம உணவு......இவர்கள் இவ்வுணவை
காலம் முழுதும் காப்பாற்ற வேண்டும் அல்லவா.....
இங்கு வளருகின்ற  சுயநலமானது  அணைத்து செயல்களிலும் அமுலாகிறது...உங்களது
 மூளையில் காமத்தோடுச்  சேர்ந்து சுயநலமும் முழு ஆக்கிரமிப்பு நடத்துகின்றன.
அன்றாட வாழ்வில் அனைத்து செயல்களிலும் உங்கள் சுயநலத்தின் சுயரூபத்தை  பார்க்கலாம்.!!!!!!!

அது ஒரு சுற்றுலா விடுதி, பேருந்துலிருந்து வந்து தங்கியவர்களுக்கு இரண்டு நபர்களுக்கு ஒரு உள் அழுக்கு மற்றும் வெளி அழுக்கு அகற்றும்  அறை...அதுதாங்க குளியல் வசதியுள்ள கழிப்பறை....அதில் ஏற்கனவே உபயோகபடுத்திய சோப்பு ஒன்று...
சில மணி நேரங்களாக உணவாக உட்கொண்டவைகளை உடனே வெளியற்றபடவேண்டிய   கட்டாயம்.... முதலாமவன் செல்கிறான்... உள் அழுக்கை நீக்கி விட்டு கைகளை சுத்தம் செய்ய ஏற்கனவே உள்ள சோப்பையும், குளியலுக்கு, அவன் கொண்டு வந்த புது சோப்பையும் உபயோகபடுத்தி விட்டு செல்லும் பொது அவன் புது சோப்பை மறந்து அறையிலேயே விட்டுவிட்டு  செல்கிறான்.... இரண்டாமவன்  வருகிறான் இப்போது இரண்டு சோப்பும் ஈரமாக இருக்க, முதலாமவன் புது பெரிய சோப்பை குளியலுக்கும், பழைய சோப்பை கைகளையும் கழுவிஇருக்க வேண்டும் என்று சரியாக யூகித்து....பழைய சோப்பு அருவருப்பாக இருக்க.... கைகளுக்கு முதலாமவனின் புது சோப்பையும்....குளியலுக்கு இவனின் புது சோப்பையும்,  உபயோகபடுத்தி விட்டு செல்லும் போது  இவனின் புது சோப்பை எடுத்து செல்கிறான்...
இது சுயநலத்தின் அவ்வப்போது அரங்கேறும் அவதாரம்!!!!
எவ்வளவு கேவலமான, சுயநலமான மற்றும் பரந்த அவர்களின் குறுகிய மனப்பான்மை!!!
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் மற்றவர்கள் இவ்வாறு இருக்கிறார்கள் என்று இவர்களிடம் கூறினால் 'அடடா இவ்வளவு கேவலமாகவா நடப்பார்கள்??!!!' என்று மிக உத்தமர்கள் போல் எந்த தவறும் நடக்காதது போல் நடிப்பார்கள்......பொய்யர்கள்...
தனிமையில் உண்மையில் கேவலமாக இருக்கின்ற நீங்கள்..பொதுவில் நல்லவர் போல பொய்யர்களாக இருக்கிறீர்கள்....

தினம் தவறாது உடல் உள் மற்றும் உடல் வெளி அழுக்குகளை வெளியேற்றும் உங்களுக்கு மன அழுக்கை வெளியேற்ற மனதில்லை.

நீங்கள்
உடலின்  உண்மையை  உடுப்பினால் மறைப்பது போல் 
மனதின் உண்மையை  நடிப்பினால் மறைக்கிறிர்கள்.

புத்தர் (Peace be upon him), உண்மையின் உருவம் அவர். முழு நிர்வாணம் அவர்.
நிர்வாணம் என்பது ஓர் முழு உண்மை.
விவரம் தெரியாத சிறு குழந்தைகள், பைத்தியகாரர்கள், ஆறு அறிவிற்கும் குறைவான உயிரினங்கள் இவர்கள்  முழு உண்மைக்காரர்கள்.
அப்படியானால் இயேசு (Peace be upon him), முஹம்மது நபி (Peace be upon him) மற்றும் உடை அணிந்த இன்னும் பிற தீர்க்கதரிசிகள்  உண்மையானவர்கள் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்...

இயேசு (Peace be upon him), முஹம்மது நபி (Peace be upon him) போன்றோர்கள் வாழ்ந்த பிரதேசமானது கடும்பனி, கடும்குளிர் கடும்காற்று மற்றும் கடும்வெயிளால் ஆனது.
ஆகவே உடை தேவையான ஒன்று என்பது ஒருக் காரணம்.... இன்னும் பலக்  காரணங்கள் இருக்கின்றன.....


ருவனுக்கு ஒருத்தி கலாச்சாரத்தில் வெகு பேருக்கு அவர்களின் காமப்பசிக்கு உணவு பற்றாக்குறையாகவே  உள்ளது. இதனாலேயே பாவம் அவர்கள் பார்வைகளால் உண்டு பசி தீர்க்க  பார்க்கிறார்கள்.
இதில் பெண்கள் பெரும்பாலோர்  சில கலாச்சார காரணங்களுக்காக தன் மனதிலேயே பசியை அடக்கி மனமுடிச்சி இடுகின்றனர். இது  பெண்களால்  மட்டுமே  முடியும்... ஏனென்றால் பெண்களுக்கு இயற்கையாகவே ஆண்களை விட மன வலிமை, மனத்திடம், மன இறுக்கம், மனக்கடுமை அதிகம்....
உதாரணத்திருக்கு நீங்கள் பார்க்கலாம்........சில காரணங்களுக்காக ஒரு ஆணை தண்டிக்க விரும்பும் ஒரு பெண்... அவ்வாய்ப்பு கிடைக்கும் போது அவன் என்னத்தான் கதறினாலும் அவ்வளவு விரைவில் அவனை மன்னிக்க மாட்டாள்....
மனம் இறங்க மாட்டாள்....  ஆனால்  அந்த மாதிரி சூழ்நிலையில்....
ஆண் அப்படி அல்ல...சிறிது மனம் இறங்குவான்...
மேலும் உதாரணத்திற்கு ....இந்தியாவை எடுத்துக்கொள்வோம்...எத்தனையோ ஆண்கள்
திருமணத்திற்கு பிறகு மனைவி அல்லாத பெண்களிடம் உறவு வைத்து இருக்கிறார்கள்.
சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் மனைவிக்கு இது தெரிந்தும் விடுகின்றன.
அந்த மன வலியைப்   போக்க ... எத்தனை பெண்கள் மது அருந்தி மறக்க நினைக்கிறார்கள்?!; எத்தனை பெண்கள் பைத்தியமாகிறார்கள்?!  எத்தனை பெண்கள் கணவனையோ அல்லது கள்ளக்காதலியையோ கொலை செய்கிறார்கள்?!...
அவ்வளவு மன வலிமை இருக்கிறது அவர்களுக்கு  அந்த மன வலியைத் தாங்க!!!
குடும்பத்திற்கும் மற்றவர்களுக்கும் எவ்வித பிரச்சனை இல்லாமல் எவ்வளவு லாவகமாக கையாளுகிறார்கள்.... எவ்வளவு மனப்பக்குவம்!!!
இதே சூழ்நிலையில் ஆண்கள் இருந்தால்..... மது அருந்துவார்கள்; பைத்தியமாவார்கள் இல்லையேல் கள்ளக்காதலனை அல்லது மனைவியை கொலை செய்வார்கள். ஏனெனில் ஆண்களுக்கு அவ்வலியைத்  தாங்க மனவலிமை இல்லை...

முனை கரை ஓரமாக ....
மீனவரின் மகளான சத்யாவதிக்கும், நாடோடி பரஷரா முனிக்கும் பிறந்த.....
ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்று வேதத்தை நான்காக பிரித்த.....
கருமை நிற வேத வியாசர் ('வியாசா' என்றால் 'பிரித்தல்' என்றுப் பொருள்).....
1 .8 மில்லியன் (18 லட்சம்) வார்த்தைகள்; 100,000 வசனங்களோடு.....ராமாயணத்தை விட நான்கு மடங்கு பெரிய இதிகாசமாக மகாபாரதத்தை இயற்றியவர்....... இவரும் இதில் முக்கியமான கதாப்பாத்திரம்......இவர் வழி வருகிறவர்களே பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள்....
அதில் பாண்டவர்களான தர்மர், பீமர், அர்ஜூனர், நகுலர் மற்றும் சகாதேவர் இவர்களுக்கு திரௌபதி என்ற ஒரே மனைவி... ஐந்து ஆண்களுக்கு ஒருப் பெண் தாம்பத்யத்தை பகிர்ந்து கொடுக்க முடியும் என்றும் அவ்வளவு மனப்பக்குவம் பெண்ணிற்கு இருக்கிறது என்பதோடு அக்காலத்தில் ஒரு ஆணுக்கு பலப்பெண்கள் இருப்பதுபோல்...ஒரு பெண்ணிற்கும் பல ஆண்கள் சட்டரீதியாக இருந்திருப்பதை உங்களுக்கு அவர் விளக்குகிறார்...
என்னை
பொறுத்தவரையில் அவர் ஒரு அற்புதமான தீர்க்கதரிசி....பெண் சிசுக்களைக் கொல்ல கொல்ல... வருங்கால இந்தியாவில் பெண் தட்டுபாடு ஏற்ப்பட்டு இம்மாதிரியான சூழ்நிலை உருவாக போவதைத்தான் முன்கூட்டியே அறிவிக்கிறார்....

பெண்களின் இம்மனவலிமைக்கு சில உளவியல் ரீதியான உண்மைகளும் காரணம்...
பொதுவாக ஒரு மனிதனின் வாழ்வு அவன் எண்ணத்தை பொறுத்தே அமைகிறது.....
எண்ணமே வாழ்வு!!!
மனிதன் அவன் மனம் விரும்புகிறது/நினைத்து இன்புறுவது எதுவோ அதுவாகவே அவன் மாறுகிறான்; அவன் செயலும் அதனை சார்ந்தே இருக்கிறது....
பெண், .... ஆணின் அந்த இறுகிய உடல்; அதன் அணைப்பு; அதன் இறுக்கம்; அதன் உஷ்ணம்; அவனின் அந்த கடுமையான இயக்கம் மற்றும் அதனால் ஏற்படும் வலி....இவைகளை நினைத்து நினைத்து இன்புறுகிறாள்...அதனை பற்றி அதிகம் சிந்திக்கிறாள்...அதனாலேயே அவள் மனமும் இறுகி, கடினமாகி, வலிமையாகி/திடமாகி, உறுதியாக இருக்கிறது...மேலும்
 ஒருக்காரணமாக...ஆண், பெண் உண்டான காலத்திலிருந்தே பெண்கள்
அடிமைப்படுத்தப்பட்டும், அசிங்கப்படுத்தப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும் .....மனம் மறத்தும் ...வெறுத்தும்...;அவர்கள் மனம் ....கல்லாகிப்போனது.....
சரி...
ஆனால் ஆண்,... பெண்ணின்...அவள் உடலின்....அந்த மென்மை; மிருது; அந்த ஸ்பரிசம்; பளபளப்பு; இதை பற்றி   நினைத்து நினைத்து அவன் மனதும் மிருதுவாக, மென்மையாக மாறி விடுகிறது.
உடனே உங்களுக்கு ஒரு கேள்வி எழுவது எனக்கு புரிகிறது.....
ஆண் ஆணையும் (homo) மற்றும் பெண் பெண்ணையும் (lesbian)  விரும்பினால் ஆண் மனம் இறுகியும், பெண் மனம் அவர்கள் உடலுக்கு ஏற்றார்ப்போல் மென்மையாகவும் மாறி விடுமா என்பதுதானே அது?!
அது இருக்கட்டும்....முதலில் ஆண் ஆணையும்...பெண் பெண்ணையும்...விரும்பி புனர்ந்துக்கொண்டிருந்தால் சந்ததி என்பதேக் கிடையாது...மக்கள் உற்பத்தி நின்று போகும்......
ஆனால்...பலநன்மைகளும் இருக்கின்றன...ஆம்.....
அதில் பெண்ணடிமைத்தனம் கிடையாது. ஆணாதிக்கம் கிடையாது..பெண்களுக்கு மாமியார் கொடுமை கிடையாது...பின்னாளில் இவர்கள் மாமியாராகி மருமகளை கொடுமைப்படுத்தவும் வாய்ப்பில்லை. .....ஆஹாஹா..
உயரும் உலக மக்கள் தொகையை பார்க்கும் பொழுது...ஓரினச்சேர்க்கை என்பது தேவையான ஒன்றே!! ஆஹாஹஆஹா....
அவர்களைக்கேட்டால் கணிதச் சமன்பாட்டில்...... '+' ம் (கூட்டல்) '+' (கூட்டல்) இம்  பெருக்கினால் '+' (கூட்டல்)ம்....
'__' (கழித்தல்) ம் '__'(கழித்தல்) ம் பெருக்கினால் '+' (கூட்டல்)ம் ஆக .. ஓரினச்சேர்க்கையின் மூலம் நன்மையே என்கிறார்கள்.....

யற்கையிலேயே ஆணின் உடலமைப்பு பெண்ணிற்கும்... பெண்ணின் உடலமைப்பு ஆணிற்கும்...உடலுறவிற்கு  ஏற்றவாறு அமைந்துள்ளது .......
எனவே  ஆண்- ஆண் (HOMO )    மற்றும் பெண் - பெண் (LESBIAN )   உடலுறவு இயற்கைக்கு எதிரானதே....
நான் கேட்கிறேன்...உங்களில் எதுதான் இயற்கையானது!!?
சாதாரணமாக
 தெரிந்தவர்களைப் பார்க்கும் போது மனதில் ஒன்று நினைத்து வெளியில் சிரித்து..மனதில் அல்லாததை பேசி நடிப்பை தொடங்கும் போதே...இயற்கை
 அல்லாத செயற்கைதனம்  தொடங்குகிறதே...இவ்வாறு நீங்கள் வாழும் வாழ்க்கையில் முழுவதும் செயற்கையாகவே இருந்து....இறக்கும் போதுதான் இயற்கை ஆகிறீர்கள்..ஆதலால்த்தான் இறந்தவுடன்  'இயற்கை எய்தினார்' என்கிறார்கள் என்னவோ??!!!.....
இவ்வாறு..நீங்கள் மட்டும் இயற்கைக்கு மாறாக நடக்க...ஓரினச்சேர்க்கையாளர்களை   மட்டும் ஏன் பழி கூறுகிறிர்கள்.....
சரி!!!
நான் கூறியது போல்... ஆண் காம திருப்தியின்மையால்... அவன் மனது  பெண்களை  நோக்கியே உள்ளது.....
உதாரணமாக...
பெண்ணின் இறுக்கமான இருதயத்திற்கு வெளியே ...அந்த இரு மென்மையான அழகுகளை கவ்வி பிடித்திருக்கும் உள்ளாடையின் / பிராவின் நாடா தெரிந்தாலே போதுமே.... ஆண்களுக்கு அந்த வினாடியில்  அவன் மனம் ஒருமுகப்படுத்தப்பட்டு முழு கவனமும் உள்ளாடைக்குள் திசை திருப்ப பட்டுவிடுகிறது !!!
சரி.... ஆண்கள் மட்டும் தான் இப்படியா??!!!
இங்கே இடைமறித்து வான்புகழ் வள்ளுவர் (Peace be upon him )...
 "பெண்இயலார் எல்லாரும் கண்ணின்  பொதுஉண்பர்
    நண்ணேன் பரத்தநின் மார்பு."
அதாவது... பெண்ணாக இருப்போர் எல்லோருமே பொதுவாக நினைத்து கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பை பாவை நான் தழுவ மாட்டேன் என்று பெண்கள் ஆண்களை பார்வையால் உண்பதை பற்றிக் கூறுகிறார்.
காமப்பார்வை ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது என்பதற்கு இது உதாரணம் தான் என்றாலும்....ஆண்களுக்கு காமக்கனிவு அதிகம் ... அதாவது...எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர்கள்...
அவர்களின் காமவீச்சு அந்த காமா கதிர்வீச்சை விட (Gamma rays –γ) அதிவேகமாக உள்ளாடையின் உள்ளே ஊடுருவுகிறது....அதையும்  தாண்டி மேலும் ஊடுருவ வேண்டும் என்பதே என் ஆசை....அங்கே உள்ளே நாற்றம் எடுக்கும் இரத்தத்தையும், சதையையும், எலும்பையும், நரம்பையும்....
பார்க்க விகாரமான இதயத்துடிப்பையும்.....
அழகுருவமாய், நறுமணமாய், நல்ல நிறமாய்....உண்ட உணவுகள்.... உருமாறி,  மணம்மாறி, நிறம்மாறி வெளியேறுவதர்க்கு  தயாராக தங்கிஇருப்பதையும் பார்க்கவேண்டும்....உண்மையை உணரவேண்டும்...என்பதே என் ஆசை!!!

அல்லாஹ் கூறினான்:
உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்முன்றாக, நான்குநான்காக மனந்துக்கொள்ளுங்கள்.   (திருக்குரான் 04 : 03)
என்று முஹம்மது நபி (Peace be Upon Him) எதார்த்தமான உண்மையை எடுத்துரைக்கின்றார்.
ஆண்கள் கண்களால் செய்யும் விபச்சாரத்தை குறைக்க அவர் கூறும் வழி!!!

முஹம்மது நபி (Peace be Upon Him) தலைச்சிறந்த திர்க்கத்தரிசி அவர். வாழ்வியல் முறைகளை மிக நுணுக்கமாக அருளிய திர்க்கத்தரிசி அவர்.

இன்று உலகில் உள்ள ஆண் பெண் விகிதச்சாரத்தை (Human Sex Ratio) பார்த்தால்.... முஹம்மது நபி (Peace be Upon Him) அருளியதில் இப்போது கூறப்போகும் ஒன்றும் ஒரு காரணமாக இருக்கலாம்.

உலகில் தற்போது ஆண் பெண் விகிதச்சாரம் சராசரியாக 1 :1 .
ஆண் விகிதம் சற்று அதிகம்... 105 ஆண்களுக்கு 100 பெண்கள்.
CIA world factbook (Centre Intelligence Agency- USA) கணக்கெடுப்பின் படி முஸ்லிம் நாடுகளான சவுதி அரேபியா, அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் நாடுகளில் முறையே 1 .13 (113 ஆண்களக்கு 100 பெண்கள்), 2 . 73 (273 ஆண்களுக்கு 100 பெண்கள்) மற்றும் 2 . 87 (287 ஆண்களுக்கு 100 பெண்கள்) ஆண்கள் மக்கள் தொகை அதிகமாகவும்

கிறித்தவ  நாடுகளான  ரஷ்யா, லத்வியா,  உக்ரைன்  நாடுகளில்   முறையே  0.46 (46 ஆண்களுக்கு  100 பெண்கள்), ௦௦ ௦0.48 (48  ஆண்களுக்கு 100 பெண்கள்),  மற்றும் 0௦.52 (52   ஆண்களுக்கு 100 பெண்கள்), .....ஆக  பெண்கள் தொகை அதிகமாகவும் உள்ளன.

இப்படியாக உலகில் இரு பெரு மதங்களான கிறித்தவ மற்றும் முஸ்லிம் மதங்களில்.......ஆண்கள் தொகை அதிகம் உள்ள முஸ்லிம்கள் .......பெண்கள் தொகை அதிகம் உள்ளே கிறித்தவ பெண்களை மனம் செய்துக் கொள்ள வாய்ப்புகள் இருப்பதினால் .... வருங்காலங்களில்  இரு மதங்களுக்கும் உள்ள பிரச்சனைகள் குறைய நிறைய வாய்ப்புகள் உள்ளன.....

இயேசுவைப் (PEACE BE UPON HIM ) பற்றி.....அவரின் வாழ்வுப்பற்றி..அவரின் இறைப்பணி பற்றி...அவரின் பாடுகள் பற்றி...அவரின் முடிவுப்பற்றி....மீண்டும் உலகமுடிவில் அவரின் வருகையைப்பற்றி....திருக்குரானில் முஹம்மது நபி (PEACE  BE  UPON  HIM  )....கூறிய அளவிற்கு எவரும்...எந்த தீர்க்க தரிசியும் கூறியதில்லை.....இவ்வாறு இரு நபிகளுக்குள் எந்த வேறுபாடுகளும் இல்லாத நிலையில்.....அவர்களை பின்தொடருகிறோம் என்று மார்தட்டிக்கொண்டு...அவர்களை கேவலபடுத்தும் அளவிற்கு அடித்துக்கொண்டு சாகிறார்கள்...இருமதத்துகாரர்கள்... ..அது சரி!!...ஒரு மதத்திலேயே எண்ணற்ற பிரிவுகள், வேறுபாடுகள் இருக்க....அடுத்த பிரிவுகளை அழிக்க அம்பைச் செலுத்தும் போது  .....அடுத்த மதக்காரர்களிடம்  மட்டும் என்ன அன்பையா செலுத்துவார்கள்???!!!....
தூணிலும் துரும்பிலும் இருக்கின்ற இறைவன்...நீங்கள் செல்லும் இடமெல்லாம் கடவுள் உங்களை கண்காணித்து காப்பாற்ற வேண்டும் என்றும் நினைக்கிற நீங்கள் அடுத்தவர்களுக்கு மனதளவில் மற்றும் செயலில் உங்களின் சுயநலத்தின் பால் செய்துக் கொண்டிருக்கும் அநீதியை மட்டும் கண்காணிக்காமல் இருப்பாரா என்ன??!!...
 என்னை பொறுத்தவரையில் இவ்வாறு இந்த மதவெறி மற்றும் அதன் சொந்தக்காரர்களான இனவெறி, சாதிவெறி, மொழிவெறி இவைகளை உடைக்கவல்ல சக்திகளுள்  காமச்சக்தியும் ஒன்று!!!
ஆணுக்கும், பெண்ணுக்கும் துணை கிடைக்கவில்லை என்றால் அவர்களுக்கு வேண்டிய ஒரே மதம் கிடைக்கிற பெண்ணின் மற்றும் ஆணின் சம்மதம் மட்டுமே!!!

ஒரு  ஆச்சர்யமான விஷயம் அது என்னவென்றால்...ஆண் பெண் பிறப்பு விகிதம் கிட்டத்தட்ட 1 : 1 என்றளவில் தற்போது உள்ளது.
இது சற்று மாறி......ஒரு 50 வருடங்களுக்கு ஆண் பிறப்புக்கள் அல்லது பெண் பிறப்புக்கள் மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்!???
சற்று சிந்தித்துப பாருங்கள்.....
ஆனால் என்னை பொறுத்த வரையில் அப்படித்தான் நடக்க வேண்டும்... அதுவும்..
ஆண் பிறப்புக்கள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட/ஒடுக்கப்பட்ட மற்றும் கறுப்பர் இன மக்களாகவும், பெண் பிறப்புக்கள் அனைத்தும் உயர்சாதி/பணக்கார மற்றும் வெள்ளையர் இன மக்களாகவும் இருக்க வேண்டும்...
இதுத்தான்  சாதிவெறி, இனவெறி மற்றும் மதவெறி ஒழிய ஒரே வழி.


சரி...நான் ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரம் மற்றும் அதன்வழி விபச்சாரத்தை பற்றி பேசிக்கொண்டே இங்கு வந்துவிட்டேன்...ஓகே...
சரி அப்படிஎன்றால்...பலப்பேருடன் உறவு (Group Sex) வைத்துக்கொள்வது மட்டும் சரியா?!!!!.....உங்கள் கேள்வி புரிகிறது....
திருக்குரானிர்க்கு அடுத்தப்படியாக
 முஸ்லிம் மக்களின்  ....(முஸ்லிம் என்றால் அரபி மொழியில் 'விசுவாசி'
என்றுப்பொருள்)...
அதிகாரபூர்வமான நூல்...
திரு.புகாரி அவர்களின்  சுமார் 12 வருடக்காலமாக  தொகுத்த..... கி.பி 846  ல்  முடித்த ஸஹிஹ்-அல்- புகாரி நூலிலிருந்து சில வரிகளைப் பார்ப்போம் ....

நபி (Peace be Upon Him) அவர்களின் துணைவியரான ஆயிஷா (ரலி) அறிவித்தார்...
அறியாமை காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைப்பெற்றன.

முதல் வகை:
இன்று  மக்களிடையே வழக்கத்திலுள்ள திருமணத்தை போன்றதாகும்:

இரண்டாம் வகை:
ஒருவர் தம் மனைவியிடம் , "நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்தவுடன் இன்ன பிரமுகருக்கு தூது அனுப்பி ( அவர் மூலம் கருத்தரித்து கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொள்".
என்று கூறிவிட்டு , அவள் கருத்தரிக்கும் வரை அவளை(மனைவியை) விட்டு விலகி இருப்பார். அந்த பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாலென தெரியவந்தால், விரும்பும்போது அவளுடைய கணவர் அவளுடன் உடலுறவுக் கொள்வார். குலச்சிறப்புமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்து வந்தனர். இந்த திருமணத்திற்கு  "நிகாஹு இல் இச்ச்திப்லாவு " (விரும்பி பெரும் உடலுறவுத் திருமணம்) என்றுப் பெயர்.

சரி..........இப்போது உங்களுக்கு இந்த வகையை சட்டமாக்குகிறார்கள்  என்றால் ... உங்களின் எண்ணம் எப்படி  இருக்கும்!!??...
இது ஆண்கள்.......'நல்லவனாக நடித்தால் பலப்பெண்களை சட்டத்துனையோடே
 அனுபவிக்கலாமே'.....
சிலப்பெண்கள்....'கணவரை விட இவர் நன்றாக (உடலுறவில்)  இயக்குகிறாரே!!!' ......
சிலப்பெண்கள்....' கணவரை விட்டு இவரிடம் எப்படி...என்ன கொடுமை இது'........
தனக்கு
 பிடிக்காத காரியத்தில் குழந்தை ஈடுப்ப்படும்போது வளர்ப்பு தந்தையின் எண்ணம்....
கணவன், மனைவி மற்றும் குழந்தையுடன் குழந்தையின் தந்தையை சந்திக்கும் போது  கணவன் மனைவிக்கு ஏற்படும் எண்ணங்கள்....
குழந்தை பக்குவமடைந்தவுடன்..பெற்ற தந்தையையும்,,,வளர்ப்பு தந்தையையும் அணுகும் முறை.....
இவ்வாறு பலச்சிக்கல்கள்....மொத்தத்தில் மனமகிழ்ச்சி முழுதும் மங்கி இருக்கும்  அக்குடும்பங்களில்.....................
இதை நபி (Peace be Upon Him)அவர்கள் தகர்த்தெறிந்தார்.

மூன்றாம் வகை;
பத்துப்பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்றுக்கூடி அவர்கள் அனைவரும் ஒருப் பெண்ணுடன் உடலுறவுக் கொள்வார்கள். அவள் கருத்தரித்து பிரசவமாம்  சில நாள்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்றுக்கூடுவார்கள். அப்போது அவர்களிடம் 'நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். இப்போது எனக்குக் குழந்தைப் பிறந்துவிட்டது' என்றுக் கூறிவிட்டு...அவர்களில் ஒருவரை நோக்கி 'இவன் உங்கள் மகன், இன்னாரே ' என்றே விரும்பிய ஒருவரின் பெயரையே அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.

நான்காம் வகை திருமணம்:
நிறைய மக்கள் ஓரிடத்தில் ஒன்றுக்கூடி ஒருப் பெண்ணுடன் உடலுறவுக் கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்கமாட்டாள்.  இந்தப் பெண்கள் விலை மாதுகள் ஆவர். அவர்கள் தங்களின் வீடு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள்.  இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்து குழந்தை பிறந்தால், அவளுடன் உடலுறவுக் கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்றுக்கூட்டப்படுவார்கள்.  அங்க அடையாளங்களை வைத்து தந்தை - பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள்.  தாம் தந்தையெனக் கருதிய ஒருவனுடன் அந்தக்குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள்.  அந்த குழந்தை அந்த தந்தையிடம் சேர்க்கப்பட்டு 'அவரின் மகன்' என்றுப் பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வரும். அவன் தன் குழந்தையல்ல என்று அவனால் மறுக்க முடியாது.

இதில்..மூன்றாம் மற்றும் நான்காம் வகைகளில் (குரூப் செக்ஸ்) ஒப்படைக்கப்படும் குழந்தையை மறுக்கமுடியாமல் எடுத்துச்செல்லும் அத்தந்தையின் மனநிலை எப்படி இருக்கும்!!?.....அத்தந்தை - குழந்தை உறவு மற்றும் அத்தாய் - குழந்தை உறவு...எப்படி இருக்கும்!!?
குழந்தையின் எதிர்க்காலம் என்ன என்ற கேள்விக்கு பதில்.....பெரிய கேள்விக்குறியே!!?...........
அத்தாயுடன் உடலுறவில் ஈடுப்பட்ட மற்ற ஆண்களின் எண்ணம் வளர்ப்புத்தந்தை, அத்தாய் மற்றும் குழந்தையை பார்க்கும் போது எப்படி இருக்கும்!!?
இக்காரணங்கள் மற்றும் பாலியல் நோய்க்கான பலச்சாத்தியங்கள் இருக்கின்ற காரணத்தினாலும் நபி அவர்கள் இம்முறைகளை  தடுத்திருக்கலாம்!!!

ஒரு குறிப்பு ........
GROUP SEX - குரூப் செக்ஸ் - ஒரே சமயத்தில்  ஆண்கள் பெண்கள் என மூன்று நபர்களும் அதற்கு  மேலும் உடலுறவில் ஈடுப்படுவது....
உட்குறிப்புகள்....
GANG BANG  - (கேங் பங்) - ஓர் ஆண் பலப்பெண்கள் அல்லது ஓர் பெண் பல ஆண்களுடன் ஒரேச்சமயத்தில் உடலுறவில் ஈடுப்படுவது...
THREESOME  - த்ரீசம்  - ஓர் ஆண் இரண்டுப் பெண்கள் அல்லது ஓர் பெண் இரண்டு ஆண்களுடன் ஒரேச்சமயத்தில் உடலுறவில் ஈடுப்படுவது...

பொதுவாக காமப்பசி உள்ளவர்களுக்கு தெளிவான சிந்தனை, செயல்... மற்றும் மனஅமைதி என்பதேக்கிடையாது.....இதற்கு மனம் ஒருநிலைப் படுத்த வேண்டும்... அதற்கு சரியான உகந்த பயிற்சி வேண்டும்.. அந்த பயிற்சி திருப்திமிக உடலுறவே!!!..

உடலுறவின் போது மனம் முழுதும்....ஒருநிலைப் படுத்த படுகிறது.......அதுவே அடிக்கடி அரங்கேற....அதுவே அவர்களுக்கு சிறந்த பயிற்சி ஆகிறது.....இந்த ஒருநிலை படுத்தும் பயிற்சி தான்....விழிப்பு நிலையிலே ஒன்றும் உணர்ந்திடாத ஒரு பேரானந்த நிலை..... பேரின்ப நிலை...... ஆழ்நிலை.....  தியானத்திற்கு முதற்படி...... அதை அடைய இந்த சிற்றின்ப பயிற்சி தான் ஏணிப்படி என்பதை சந்திர மோகன் ஜெயின் என்கிற பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ்....கி.பி. 1989 லிருந்து ஓஷோ என்று அழைக்கப்பட்ட ஓஷோ அவர்கள் காமத்திலிரிந்து கடவுளுக்கு (From sex to Superconscious) என்ற நூலில் வெகு விரிவாக விவாதிக்கிறார்.

தெளிவான சிந்தனைக்கும் , செயலுக்கும்  காமத்ததிருப்தி அவசியம்...அந்த காமதிருப்தி குரூப் செக்சில்   விரைவாக சரியாக கிடைக்கிறது என்றால் அதை  சரி இல்லை என்று கூறுவதற்கு இல்லை.

குரூப் செக்ஸ் செய்வதற்கும்  ஒரு மனப்பக்குவம் வேண்டும்!!!...
சுயநலம் அதிகமுள்ளவர்கள் இதில்
ஈடுபடமுடியாது...
இதில் ஈடுபடுகிறவர்களுக்கு இயற்கையாகவே பெருந்தன்மை, விட்டுகொடுக்கும் மனோபாவம் அதிகம்....
சாதிவெறி, மொழிவெறி, இனவெறி, மதவெறி மற்றும் சுயநலம்  மிகவும் குறைவு...இது உளவியல் உண்மை.

நான் ஏற்கனவே கூறியவாறு காமப்பசி, காமவேட்கை உள்ள இவர்கள்....  காமப்பட்டினியால் வாடும் போது கிடைக்கும் எதுவையும் விட்டுகொடுக்கமாட்டார்கள். வயிற்றுப்பசியால் வாடும் மக்கள் உணவுக்கிடைத்தால் மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு சும்மா இருப்பார்களா???.....அதுபோலத்தான் இதுவும்.... இங்கு வளர்கிறது சுயநலம்....
இந்த சாதிவெறி, மதவெறி, இனவெறிஎல்லாம் அதன் பரிணாமமே!!!
வயிற்றுப்பசி எதோ ஒரு வழியில் திர்ந்துக்கொண்டிருக்க...பாவம்  இவர்களுக்கு காமப்பசி மட்டும் தீரவில்லை இன்னும்...
காமத்திருப்தியில் உள்ளவர்களுக்கு இவ்வெறிகளே குறைவுத்தான்...வெறிகள் மட்டும் அல்ல...இவர்களுக்கு எதன்மீதும் உள்ள பற்றும் குறைவுத்தான்...நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, குடும்பப்பற்று...ஏனென்றால் இவர்களுக்கு சுயநலமே குறைவுத்தானே!!!
நீங்கள் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்...நாட்டுப்பற்று உள்ளவன் பொதுநலவாதி  என்று.....நான் கூறுகிறேன்...அவன் மிகப்பெரிய சுயநலவாதி...முதலில் நாட்டுப்பற்று என்பான்....நாட்டுக்குள் வந்துவிட்டால்...மாநிலப்பற்று, மொழிப்பற்று என்பான்....அதற்குள் வந்துவிட்டால் ஊர்ப்பற்று என்பான்....அதற்குள் வந்துவிட்டால்..சாதிப்பற்று என்பான்....அதற்குள் வந்துவிட்டால்...உள்சாதிப்பற்று; குடும்பப்பற்று என்பான்....எனவே நாட்டுப்பற்று, நாட்டுப்பற்று என்று சரணம் பாடுகிறவர்களுக்கு சாதிப்பற்று கண்டிப்பாக இருக்கும் என்பதும்
 உளவியல் உண்மை!!!
உங்களின்  இயேசுவோ (PEACE BE UPON HIM ), புத்தரோ (PEACE BE UPON HIM ),  முஹம்மது நபியோ (PEACE BE UPON HIM ), ....சாதிக்கோ, மதத்திற்கோ, இனத்திற்கோ, மொழிக்கோ முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களா??....அதை அவர்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்திருக்கிறார்களா??? ....சத்தியமாக இல்லை...அவர்கள் உலகுக்கே பொதுவானவர்கள்...அவர்களுக்கு பூமி முழுதுமே ஒன்றுத்தான்...நடுநடுவே பள்ளம்மாக இருப்பதினால் நீர் சூழ்ந்துல்லக் காரணத்தினால் நாடுகள், கண்டங்கள் என்ற எல்லை பிரிவுகள் உள்ளன என்பதைத் தவிர உலகம் முழுதும் ஒரேத்தரையாகவே இணைந்துள்ளன !!!....

இயற்க்கைக்கு முன் அனைவரும் சமம்!!! ...இயற்கைக்கு முன் பாகுபாடு  இல்லை......மழை பெய்தாலும், வெள்ளம் வந்தாலும்...தென்றல் அடித்தாலும், புயல் அடித்தாலும்..அது மக்களிடம் பாகு பாடு பார்ப்பதில்லை...இயற்கைக்கே அப்படி இருக்க....அதைப்படைத்த கடவுளுக்கு எப்படி மக்களில் பாகு பாடு...உயர்வுத் தாழ்வு பார்க்கமுடியும்?!!!
....உண்மை இப்படி இருக்கும் பட்சத்தில்...கடவுளை வணங்கி...அவரை பின்தொடரும் நீங்கள் உங்களில் பாகு பாடு உயர்வுத் தாழ்வு பார்ப்பதென்ன!!??

சில பொசிஷன்களும், காம்பினஷன்களும்  (POSITION AND COMBINATION) குரூப் செக்சில் மட்டுமே சாத்தியம்...
குரூப் செக்ஸ் செய்பவர்கள்  கண்டிப்பாக காமத்திருப்தியில் இருப்பார்கள்....
அவர்களிடத்தில் ...... கண்களால் விபச்சாரம் செய்தல்.... கண்களால் வண்புனருதல் போன்ற கேவலமான/அருவருக்கத்தக்க  செயல்கள் குறைவு!!!  சுயநலம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறைவு!!!
இவ்வாறு காமத்திருப்தியில் இருப்பவர்களுக்கு  இறைவன் வெறுக்கக்கூடிய மொழிவெறி,
இனவெறி, சாதிவெறி, மதவெறி குறைவாக இருப்பதினால்...
இறைவனுக்கு மிக அருகாமையில் இருக்கின்றனர்.
இதில் இவர்கள்....குரூப் செக்ஸ் செய்பவர்கள்....., ஒருவனுக்கு  ஒருத்தி என்றப் போர்வையில் விபச்சாரம் மற்றும் கேவலமான செயல்களை செய்துக்கொண்டிருக்கும் உங்களைவிட கண்டிப்பாக  மேலானவர்களாக...இறைவனுக்கு மிக அருகாமையில் இருப்பார்கள் என்று உங்களுக்கு உண்மையாக கூறுகிறேன்.

வடஇந்திய மத்தியப்ரதேஷத்தில் கி.பி 950 முதல் கி.பி 1150 வரை சுமார் 200 வருடங்களாக சண்டாள மன்னர்களால் கட்டப்பட்டு இன்று UNESCO WORLD HERITAGE SITE ஆகவும்,   இந்தியாவில் உள்ள எழு அதிசயங்களில் ஒன்றாகவும் வீற்றிருக்கும் காஜுராஹோ....., லக்ஷ்மன், கன்டறிய மகாதேவ், சித்ரகுப்தா விஸ்வநாத் கோயில்களிலிருந்து...தென் இந்திய கோவில்களான மதுரை மீனாட்சி அம்மன், அழகர் கோவில்...திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சிற்பங்கள் வரை....குரூப் செக்ஸ் உடலுறவு  காட்சிகள் எவ்வளவு தத்ருபமாக உங்களுக்கு விளக்கப்பட்டிருன்கின்றன...
அதிலும் சைவ திருக்கோவில்களில் கோபுரங்களைத் தாண்டி உள்ளே கர்ப்ப அறைக்குள் சென்றால் சிவனின் ஆண்குறி (லிங்கம்)....பார்வதியின் யோனிகுழியோடு இன்ப உறவு பூண்டு இருக்கும் அற்புதமானக் காட்சி. ....சிவலிங்கம்தான் அது........
இவைகள் தான் உங்களை நல்வழி படுத்த உள்ள பாடங்கள்....

நீங்கள் எதற்க்காக கோவிலுக்கு செல்கிறீர்கள்.... நல்லது நடப்பதிர்க்காக... நல்ல செயல்
உங்கள் வாழ்வில் நடந்திட...அப்படித்தானே!!?....அப்படியாக வேண்டுமானால் உங்கள் செயல் சரியாக இருக்க வேண்டும்.....அதற்கு உங்கள் சிந்தனை தெளிவாக இருத்தல் வேண்டும்.....அதற்கு மனம் ஒரு நிலைப் படுத்துதல் வேண்டும்.....அதற்கு  மனம் அமைதி வேண்டும்........அதற்கு நல்ல திருப்தி கொள்ளும் மட்டும் உள்ள உடலுறவு வேண்டும்....என்பதை உணர்த்துவதர்க்காகத்தான் இச்சிற்பங்கள்  மற்றும் சிவலிங்கங்கள்......  நீங்கள் எவ்வித மனமுடிச்சும் இன்றி மகிழ்ச்சியாக வாழ அக்கோவில்கள் கூறும் பாடங்கள் அவை. 
இவ்வாறு  மனஅமைதி உள்ளவர்களுக்கு சுயநலமோ, பொறாமையோ...மற்ற வெறிகளோ இன்னும் இறைவனுக்கு வெறுக்கத்தக்க செயல்களோ.... மிக மிகக் குறைவு....இதற்க்கெல்லாம் அடிப்படை காமத்த்திருப்தி!!!
சரி!!
குரூப் செக்ஸ் செய்பவர்களில் பெரும்பாலோர்  உங்களைவிட எவ்வளவு வித்தியாசப்படுகிறார்கள் என்றால்...
இவர்கள் அதிகப்பட்சம் கடவுளுக்கு எதிரியாக மட்டும்தான் இருக்க முடியும்.  ஆனால் நீங்களோ கடவுளுக்கு துரோகியாக இருக்கிறீர்கள்.
உங்களில் எவராவது ஒருவருக்கு தைரியம் இருக்கிறதா?! ' நான் கடவுளுக்கு துரோகி இல்லை' என்று கூறுவதற்கு!!!!.
பைபிள், ரிக் வேதம், திருக்குர்ஆன் என எண்ணற்றவைகளை வாசிக்கிறீர்கள்...கோயில், மசூதி, ஆலயம்...என செல்கிறீர்கள்...அதிக நேரம்  வணங்குகிறீர்கள்....
ஆனால் கடவுள் வெருக்கத்தாக செயல்களான சுயநலம், பொறாமை, ஆணவம், பழிவாங்கும் எண்ணம்...நண்பர்கள் முன்னேற்றத்தில் ஏன் சகோதர சகோதரிகளின் முன்னேற்றத்திலேயே பொறாமை/ வயிற்றெரிச்சல் ....இவ்வாறு பலக்கேவலமானச் செயல்களை அவ்வப்போது  அளவே இல்லாமல் செய்கிறீர்கள்  ... வார்த்தைக்கு வார்த்தை கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு அவருக்கே துரோகம் செய்கிறீர்கள்....  நீங்கள் வேலை செய்யும் அலுவலகங்களில்....அப்பப்பா.....நீங்கள் வேலை செய்கிறீர்களோ இல்லையோ, உங்கள் சுயநலம் நன்றாக..வெகு நன்றாக வேலை செய்து பலப்பேரின் வேலைக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் வினை வைக்கிறீர்கள்......ச்சீ...துரோகிகளே ...............


அதி நவீன சிகை அலங்காரத்துடன் (தலைக்குளித்து
/ தலைசீவி எத்தனை மாதம்  ஆகியது  என்றுத்  தெரியவில்லை!!!), நவீன பாஷன் உடைகளுடன் (ஆங்காங்கே கிழிந்து!!!), முத்துப் போன்ற பற்கள் (அட பழுப்பு நிற முத்துங்க!!!)  தெரிய அது
  கத்திக்கொண்டிருகையில்....."ச்சா.....இன்னும்
 பஸ் வரவில்லையே.....இந்த 'பிசாசின்' பினாத்தல் வேற காதை கிழிக்கிறதே....." என்று சென்னை தி நகர் பஸ்ஸ்டாண்டில்   ராகவன் உஷ்ணத்தில் கருகிக்கொண்டிருக்கையில்... அதே பஸ் போல தூரத்தில் தோற்றம் தெரிய.....கூறிய பார்வையினால்...பஸ் நம்பரை பார்க்க முயல....அதற்குள் பார்த்துவிடக்கூடிய குறுகிய தொலைவிற்கு பஸ் வந்துவிட....பஸ் நம்பர் 12 ...."நான் போகவேண்டிய பஸ் தான்" என்று ராகவன் பஸ் ஏறினான்...

ராகவன் கூறியதுப்போல்...நகைசுவையாக எடுத்துக்கொண்டால்...... அது பிசாசுதான்  "PISS +ஆசு" ஆசு என்றால் தூயத்தமிழில் 'நினைத்த மாத்திரத்தில்' ...'உடனே' என்றுப் பொருள்.... PISS  என்பது ஆங்கில வார்த்தை....அதற்கு 'சிறுநீர் கழிப்பது'  என்றுப் பொருள்..
இவ்வாறு நினைத்த மாத்திரத்தில் சிறுநீர் கழிப்பது எது??.....விவரம் தெரியாத சிறுக்குழந்தைகள்; பைத்தியக்காரர்கள்; ஆறறிவிற்க்கும் குறைவான உயிரினங்கள்.....இந்தப்பிசாசும்  இவைகளில் ஒன்றுதான்.
பிசாசு "PIECE  + ஆசு".... பீஸ் என்றால் 'துண்டு' ....இப்படி நினைத்த மாத்திரத்தில் வார்த்தைகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் துண்டு துண்டாக உச்சரிப்பதனாலும் இப்பெயர் அதற்கு பொருந்தும்...

பஸ் கிளம்பிட...பஸ்ஸில் உள்ள ராகவனின் மனதின் எண்ணோட்டத்தில் ...."குரூப் செக்சினால் பால்வினை நோய்களும் இன்னும் பிற தீமைகளும் உள்ளனவே!!!" என்று நினைத்த ராகவன்......."ச்சா....இது கத்துவதைப் பற்றி நினைத்து கொண்டிருக்கிறேனே" என்று அவரையே கடிந்துக்கொண்டு....பயணம் செய்ய.........
இப்போது பஸ்ஸில் ராகவன் உட்பட அனைவர் காதுகளிலும் அந்த 'பிசாசு' கத்திக்கொண்டிருப்பது கேட்டு கொண்டே இருந்தது....
நீங்கள் மிகவும் அசுத்தமானவர்கள்....உங்களிடம் வரும் எதையும் நீங்கள் அசுத்தமாக்குகிறீர்கள்.. உங்களை நோக்கி மற்றும் உங்களினுள் செல்லும் எதுவும் அசுத்தமடைகின்றன... காற்று, நீர், வெப்பம், உணவு என்று எது வந்தாலும் அவைகள் பின்பு அசுத்தமாகவும், அருவருப்பாகவும், துர்நாற்றமிக்கவைகளாகவும் வெளிவருகின்றன....உங்கள் உடலைப்போலத்தான் உங்கள் மனதும் உள்ளது......நல்ல விஷயங்கள் உள்ளேச் சென்றாலும் அதை கேவலப்படுத்துகிறீர்கள் ... அசுத்தபடுத்துகிறீர்கள்..... ...உங்கள் முகத்தில்....காறி உமி.........